Publisher's Synopsis
இருட்டில் லாந்தரைக் கொளுத்திப் பிடித்துக் கொண்டு படி இறங்கி வந்த யாரோ சொல்லியபடி காத்திரமான நிழல்களைச் சுவர்களில் பதித்துப் போகிறார்கள். படகு நீள முழக்கி அழைத்தபடி காயலில் மிதந்து வரும் சத்தம் கேட்கிறது. அடர்ந்த திரையாக மழை வழி மறைக்கும் வேம்பநாட்டுக் காயல். படகுத் துறையில் குடையோடு நிற்கிற சாமு சொல்கிறான் - தம்புராட்டி, வரூ