Publisher's Synopsis
சித்த மார்க்கம் - திரு. வி. கலியாணசுந்தரனார் Siddha Maarkam by Thiru. V. Kalyanasundaram first published in 1935. பண்டை மக்கள் வாழ்வு உள்ளொளியைக் குறிக்கொண்டு நின்றது. உள்ளொளி அவர்கள் வாழ்வில் அரும்பி மலர்ந்து வந்தது. உலக வாழ்வும் கடவுள் வழிபாடும் அவ்வொளிக்கென்றே அந்நாளில் கொள்ளப்பட்டன. உள்ளொளிக்கென்று அந்நாளில் கொள்ளப்பட்டன. உள்ளொளிக்கென்று பண்டை மக்கள் கடைப்பிடித்தொழுகிய மார்க்கம் சித்த மார்க்கம் என்பது ஆராய்ச்சியால் விளங்குகிறது. சித்தமார்க்கமே சமயம் என்பது சமய நோக்கு நாளடைவில் சிதையலாயிற்று. சிதைவால் விளைந்துள்ள கேடுகள் பல. பல தெய்வ வழிபாடு, பல சமய உணர்வு, சமயவெறி, சமயப்போர், அடக்குமுறை முதலிய கொடுமைகட்கு உலகம் இரையாகி வருதல் கண்கூடு.