Publisher's Synopsis
பானைகளில் அல்ல, பண்டைய ஏடுகளில்தான் நிஜமான புதையல் ஒளிந்துகொண்டிருக்கிறது. ஆத்திச்சூடி மிக நல்ல உதாரணம். இயற்றப்பட்டு 2,000 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் இன்றும் நம்மை வியக்க வைக்கும், இன்றும் நம்மை உத்வேகம் கொள்ள வைக்கும் பல அரிய கருத்துகள் அதற்குள் பொதிந்து கிடக்கின்றன. ஔவையாரின் ஆத்திச்சூடியை இன்றைய தலைமுறையினருக்கு, அவர்களுடைய இன்றைய தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் புரியும் மொழியில், அவர்கள் உள்வாங்கவேண்டிய வகையில் புத்தாக்கம் செய்து கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் மனுவேல் ஜான் ராபர்ட். வாழ்வியல் பாடங்கள் முதல் நிர்வாகவியல் பாடங்கள்வரை; சுவையான சுயமுன்னேற்றக் கருத்துகள் முதல் நம் பார்வையை மாற்றியமைக்கும் தத்துவப் பார்வைகள்வரை ஒரு முழு உலகையும் உள்ளடக்கிய நூல் இது. சாதிக்க விரும்பும் அனைவருக்குமான கையேடு. படிக்கவும் பரிசளிக்கவும் ஏற்ற புதையல்.