Publisher's Synopsis
அழகிய கற்பனை வளத்தோடு இருக்கும் இந்தப் புதினம், எல்லைக் கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள் மற்றும் இலக்கிய வழக்கங்களைக் கடந்து விளங்குகிறது. கச்சிதமான பரிசுத்தத்தைத் தேடும் எந்த ஒரு மானுட முயற்சியிலும் உண்டாகவல்ல அ-மானுடத்தைப் பற்றிய இந்தக் கதைக்கு அனேகமாக நம் இலக்கிய உலகில் இணை இல்லை என்றே சொல்லலாம். ஒரு நீதிக்கதை என்ற முறையில் இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப எதிர்ப்பட்டு உங்களைப் பீடிக்கவல்லது.' - ஆஷிஸ் நந்தி 'அபாரமான... உருவாக்கம் மிக்க... அதி ஆழமானதொரு விதத்தில் தருண் தேஜ்பால் இந்தியாவுக்காக எழுதியிருக்கிறார்.' - வி.எஸ். நய்பால் 'அதீதங்களை நோக்கித் தள்ளப்படும் லட்சியப் பயணங்களால் எப்படி சர்வாதிகாரம் தோன்றித் தழைக்கிறது என்பதை ஒரு தொடர்சித்திரமாக உருவகித்துத் தந்திருக்கிறது The valley of masks. இதன் படைப்பாக்கச் சாதனை அசாதாரணமானது. இந்தப் புதினம் ஒரு தனிப்பெரும் வெற்றி, உலகப் பொதுக் கதை.' - சஷி தரூர்