Publisher's Synopsis
மொத்தம் ஏழு கவிதைத் தொகுப்புகள் அடங்கிய தொகுதி. பொதுச்சமூக நீரோட்டத்தின் கவிதை எனப்படும் சலிப்பான துய்ப்பிலிருந்தும், தன் முந்தைய கவிதைத் தொகுப்புகளின் கட்டுமானங்களிலிருந்தும் விடுவித்து மொழியின் புழக்கத்திற்குள் விட்டேகி இயங்குகின்றார், கவிஞர். தானே வரித்துக்கொண்ட சுயபிம்பங்களின் சுவர்களுக்குள் அடைபடாமல் விடுபடும் விழைவின் தீவிரத்தை இக்கவிதைகளில் உணரமுடியும். இலட்சியக் காதல், உடல் எல்லைக்கு வெளியே தும்பிகளைப் போல் சிறகடிக்கும் உணர்வலைகள், இசைமை, கால நீட்சி, வரலாற்றுக்கு முந்தைய வெளியிலிருந்து தொடங்கும் காதல் மொழி எனக் கவிதையை மிகவும் அந்தரங்கமான உடைமையாக்குகிறார்.