Publisher's Synopsis
சங்க நூல்களில் எட்டுத் தொகை என்னும் வரிசை யில் ஒன்றாகிய அகநானூறு அகப்பொருள் பற்றிய நானூறு செய்யுட்களை உடையது. இதனை அகமென்றும், அகப்பாட்டென்றும் சொல்வது உண்டு. பல புலவர்களின் அகத்துறைப் பாடல் தொகுதிகளாகிய குறுந் தொகை, நற்றினை, அகநானூறு என்ற மூன்றில் அடியளவினால் நீண்ட பாடல்களை உடையதாதலால் இதற்கு நெடுந்தொகை என்ற பெயரும் வழங்கும். பதின்மூன்றடி முதல் முப்பத்தோரடி வரையில் அமைந்த பாடல்கள் இந்தத் தொகை நூலில் இருக்கின்றன. இதற்கும் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பெருந்தேவனார் இயற்றிச் சேர்த்திருக்கிறார்,