Publisher's Synopsis
என்றும் அழியாத புகழோடு அன்றும் இன்றும் என்றும் நம் மனதில் வாழும் தியாகி பகத் சிங் நமது தாய்நாட்டின் ஒற்றுமை மற்றும் சுதந்திரத்தின் மீதுள்ள தவிர்க்கமுடியாத நம்பிக்கையை ஏற்கெனவே தனது குடும்பத்திடமிருந்தே பெற்றிருந்தார். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும், இந்த நம்பிக்கையின் காரணமாக முட்கள் நிறைந்த புரட்சிகரப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஒட்டு மொத்த இந்திய மண்ணும் அவரது தெய்வம்,புரட்சியின் பாதை அவரது வழிபாடு, தாய்நாட்டின் ஒற்றுமையும் சுதந்திரமும் அவரது வழிபாட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது, அதற்காகவே அவர் உயிரையே தியாகம் செய்தார். அவரது ஆளுமை ஆழ்ந்த புலமை மற்றும் அரிய பகுத்தறிவு திறன் ஆகியவை முன்னோடியில்லாத அவரது அறிவின் சிறந்ததொரு கலவையாகும். அவர் தனது ஆளுமையின் இந்த பண்பை தனது தாய்நாட்டின் ஒற்றுமை மற்றும் சுதந்திரத்தின் இறுதி இலக்காக கொண்டு அதன் வழிநடந்தார். இந்தியாவின் பொன்னான எதிர்காலத்தின் தொலைநோக்கு பார்வை, தியாகி பகத்சிங்கின் இலட்சியங்களாக அமைந்தன. அனைத்து நாட்டு மக்களுக்கும் இவை விலைமதிப்பற்ற ஒரு பொக்கிஷமாகவும், வாழ்க்கைக்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.