Publisher's Synopsis
தமிழில் பொருளை அகப்பொருள் என்றும் புறப்பொருள் என்றும் இரண்டு வகையாகப் பிரித்தார்கள். மற்ற மொழிகளில் எழுத்தையும் சொல்லையும் பற்றி இலக்கண நூல்கள் சொல்கின்றன. தமிழில் பொருளைப்பற்றியும் இலக்கண நூல்கள் வரையறுக்கின்றன, மிகப் பழைய இலக்கண நூல் என்று இப்போது வழங்கும் வரலாறுகளால் தெரிவது அகத்தியம். அதனை இயற்றியவர் அகத்தியர். அவர் தலைச்சங்கத்தில் இருந்தவர். தலைச்சங்கத்தாருக்கு அவருடைய நூலே இலக்கணமாக இருந்தது. அகத்தியத்தில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழுக்கும் தனித்தனியே இலக்கணம் இருந்தது. நாளடைவில் இசைக்கும் நாடகத்துக்கும் தனி நூல்களாக இலக்கணம் இயற்றினார்கள் சில புலவர்கள். இடைச்சங்க காலத்தில் தொல்காப்பியர் இயற்றமிழுக்குத் தனியே இலக்கணம் இயற்றினார். அதுதான் தொல்காப்பியம் . இப்போது கிடைக்கும் நூல்களுக்குள் மிகவும் பழையதாக உள்ளது அது.