Publisher's Synopsis
கி.சீனிவாசகன், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள பொம்மகோட்டை என்னும் சிற்றூரில் பிறந்தார். தமிழாசிரியரின் ஊக்குதலால் பள்ளிப் பருவத்தில் கவிதை எழுதக் கற்றுக் கொண்டார். கல்லூரியில் ஆங்கிலவழிக் கல்வியாலும், பின் அலுவலில் ஆங்கிலமே பேசியதாலும் தொடர்ந்து கவிதை எழுத இயலவில்லை. இப்பொழுது தாய்மொழிக்காக சிறிதேனும் நேரம் ஒதுக்கி நம் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளில் சில இனியவை, பிற அனிச்சை எனப் படம் பிடித்துக் காட்டுகிறார்.